என்னுள் வாழும் காதலிக்கு...
உன் கோபக் கடிதம் கண்டேன்
உன் வார்த்தைகளின் உஸ்ணத்தில் உறைந்து போன
எனக்கு காதல் கசந்து போகவில்லை!
எனக்கான உறவுகள் வாழும் சோலைவனத் தோட்டத்தில்
நான் நினைத்ததெல்லாம் நடந்தது உன்னைப் போல் தான் எனக்கும்...
ஆனால் உன்னை தவிர!
உன்னை அழவைக்க அழைக்கவில்லை!
உனக்காக உயிர்கொடுக்கும் உன் சொந்தங்களை
நமக்காக... நாம் அவர்களுக்காக மாறத்தான் அழைக்கிறேன்...
காதலனாக வேண்டுமானால் காதலை மறக்கச்சொல்!
மறக்கிறேன் நம் காதலுக்காக... நான் காதலிக்கும் உனக்காக...
ஏனெனில் நம் காதல் தொடங்கியது விட்டுக்கொடுத்தலில் தான்...
சான்றாக இன்றும் உந்தன் இதயதுடிப்பை நானும் எந்தன் துடிப்பை நீயும் உணர்கிறோம்...
உனக்காக அழும் இதயங்கள் உன்னை அழவிடும் என்றால்...
வருகிறேன் மன்னிக்கவும் பிரிகிறேன்
இதுவரை என்னை கண்ணுக்குள் வைத்து வழி நடத்தியவர்களை விட்டு
நாம் கொண்ட காதலுக்காக!
நாளை உன் விருப்பப்படி கல்லறைத் தோட்டத்தில் இருந்து
தொடங்கட்டும் நம் வாழ்க்கைப் பயணம் நம்மை பெற்றவர்களின்
இரண்டு சொட்டு கண்ணீருடன்.
காலை நான்கு மணிக்கு முதல் பேருந்து, மூன்று முப்பதிற்கு வந்துவிடு...
இப்படிக்கு
உன்_________