Amazon

20130607

காதல் கவிதை 1


உன் விழிகளுக்கு மட்டும் எப்படித்தான்

தெரிகிறதோ என் வருகை?

உன் தோழி மட்டும் திரும்புகிறாள் என்னை கொல்ல! 


20110626

நான் (எழுதி) கிழித்த பக்கங்களில் இருந்து சில...

திருட்டு 

எப்போதும் தனிமையில் தான் 
களவாடப்படுகிறது  என் கற்பனைகள்
இந்த காகித[டைரியின்] பக்கங்களால்! 


கல்லூரியின் கடைசிநாள் 

உயிர் பிரியும் தருணங்களில் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டு  விடைபெற்றுகொண்டிருக்கிறோம் வாழ்வின் யதார்தங்க்களை நோக்கி...

பல நேரங்களில்!!! 
வார்த்தைகளை வடிப்பதருக்குள் 
விடிந்து விடுகிறது என் கற்பனை இரவு... 
பல நேரங்களில்!!! 

சில  நேரங்களில்!!! 
விடைகளுக்கு வினா தெரியாமல்  விழித்து கொண்டிருகிருக்கும் 
மாணவன் போல்  விழிக்கிறேன் 
என் கவிதைகளுக்கு தலைபிடமுடியாத தருணங்களில்... 


நான் 

என் ஜனனமும்  என் மரணமும் எனக்காக மட்டுமே நிகழ்த்தப்படுகிறது 
என் துனையேதுமின்றி!


20100513

காதல்! காதல்!

இத்தனை ஆண்டுகளாய்
பொத்திவைத்த என் கண்ணியம் ஒரு நொடியில்
மரணித்துவிட்டது!

உன் ஒற்றை கண் ஓர
பார்வையில்!

-----------------------
 வரைந்து வைத்த ஒவியம் வாயடைத்து நிற்கிறது...
ஒவியமாய் உன்னைப் பார்த்து..

நீ மட்டும் ஒவியக் கண்காட்சிக்கு சென்றுவிடாதே
ஒவியங்களும் வரிசையில் நிற்கும் உன்னை காண்பதற்கு
உயிரோவியம் என்று!

----------------------

20100428

நானா !

நான் பயணப்படும் பாதையின் கரடுமுரடுகளை
களைவதற்கு வாய்ப்பிருந்தும் என் பாதங்களுக்கு மட்டும்
பாதகைகள் பயன்படுத்தி பயணப்படும் நானா
இந்த சமூகத்தின் தலையெழுத்தை தீர்மாணிக்கப் போகும்
இன்றைய நாளைய இளைஞ்சன்!!!

20100408

அச்சமில்லை! அச்சமில்லை!

என் ஆசிரியையின் அன்பான அதட்டலுக்கு அடிபணிந்து
முதல் முறையாக, கடைசி போட்டியாளனாக
குளிரூட்டப்பட்ட அறைக்குள்ளும் வியர்வை குளியல் முடித்து
பட படக்கும் இதயத்துடன் மேடை ஏறி
மெல்ல மெல்ல ஒப்புவிக்கின்றேன் எனக்கான முதல் கவிதையை

அச்சமில்லை! அச்சமில்லை! அச்சமென்பதில்லையே!

20100404

ஒரு காதலனின் ... கடைசிக் கடிதம்



என்னுள் வாழும் காதலிக்கு...

உன் கோபக் கடிதம் கண்டேன்
உன் வார்த்தைகளின் உஸ்ணத்தில் உறைந்து போன‌
எனக்கு காதல் கசந்து போகவில்லை!

எனக்கான உறவுகள் வாழும் சோலைவனத் தோட்டத்தில்
நான் நினைத்ததெல்லாம் நடந்தது உன்னைப் போல் தான் எனக்கும்...
ஆனால் உன்னை தவிர!

உன்னை அழவைக்க அழைக்கவில்லை!
உனக்காக உயிர்கொடுக்கும் உன் சொந்தங்களை
நமக்காக... நாம் அவர்களுக்காக மாறத்தான் அழைக்கிறேன்...

காதலனாக வேண்டுமானால் காதலை மறக்கச்சொல்!
மறக்கிறேன் நம் காதலுக்காக... நான் காதலிக்கும் உனக்காக...
ஏனெனில் நம் காதல் தொடங்கியது விட்டுக்கொடுத்தலில் தான்...
சான்றாக இன்றும் உந்தன் இதயதுடிப்பை நானும் எந்தன் துடிப்பை நீயும் உணர்கிறோம்...

உனக்காக அழும் இதயங்கள் உன்னை அழவிடும் என்றால்...
வருகிறேன் மன்னிக்கவும் பிரிகிறேன்
இதுவரை என்னை கண்ணுக்குள் வைத்து வழி நடத்தியவர்களை விட்டு
நாம் கொண்ட காதலுக்காக‌!

நாளை உன் விருப்பப்படி கல்லறைத் தோட்டத்தில் இருந்து
தொடங்கட்டும் நம் வாழ்க்கைப் பயணம் நம்மை பெற்றவர்களின்
இரண்டு சொட்டு கண்ணீருடன்.

காலை நான்கு மணிக்கு முதல் பேருந்து, மூன்று முப்பதிற்கு வந்துவிடு...

இப்படிக்கு
உன்_________