
என் வழ்க்கையில் தான் எத்தனை எத்தனை
சுக(ம்)மான சோகங்கள்!
சொல்ல துடிக்கும் மறைந்த மகிழ்வுகள்!
கேட்க கேட்க இனிக்கும் நண்பனின் நக்கல்கள்!
பார்த்து பார்த்து பழகினாலும் புளித்து போகாத புன்னகை முகங்கள்!
திட்டி திட்டி தீர்த்தாலும் தீராத வார்த்தைகள்
தீர்ந்துவிடும் சண்டைககள்!
நீலக் கடல் நிலத்தில் அமிழிந்து போனாலும்
நில்லாதது எங்கள் கேலிகளும் கிண்டல்களும்!
அருகில் அமரும் அவனுக்குத்தான் சோகம்
ஆனால் வருத்தமோ எங்களுக்கு!
சொல்லப்போனால் அது ஒரு அழகிய நிலாக்காலம் தான்!
அன்று அருகில் இருந்தவனை அலட்ச்சியப்படுத்திய நான்
அழுகிறேன் அவனுக்காக இன்று!!!


