குழந்தையின் கிறுக்கல்கள் கூட
ஓவியமாகலாம் !
ஒழுங்கற்ற வரிகள் கூட
வரைபடமாகலாம்!
தேவையற்ற வண்ணங்கள் கூட
புது வித மாதிரியாகலாம் !
எறியப்பட்ட பூக்கள் கூட
வரவேற்கும் தோரணையாகலாம் !
வீசப்பட்ட வண்ணப்பொடிகள் கூட
அழகுமிகு கோலங்கலாகலாம் !
அது போலத்தான் என் வரிகளும்
_க____வி____தை___ஆகலாம் !!!!!
No comments:
Post a Comment