Amazon

20071117

என் நிணைப்பு

உன்னை
மலர் என்றால் மாலையோடு வாடிவிடுவாய்!

உன்னை
நிலவென்றால் நித்திரையோடு நின்றுவிடுவாய்!

உன்னை
வான்மேக‌மென்றால் காற்றோடு காண‌மல் போய்விடுவாய்!

உன்னை
சிலையென்றால் சீற்றத்தால் சிதைந்துவிடுவாய்!

உன்னை
முத்தென்றால் நீலக்கடலில் மூழ்கிவிடுவாய்!

அத‌னால் தான் உன்னை என் மூச்சாக‌ நினைக்கிறேன்
என் மூச்சுள்ள‌வ‌ரை..

20071031

ஊடல்

காக்கவைத்துவிட்டேன் என்று நான் வரும்வரை காத்திருந்து
வந்தவுடன் வருகிறேன் என்கிறாயேடி... நில்! நில்!

ஒரு நிமிடம் உன் தடங்களை தடை செய்!
ஒரே ஒரு முறை நம் விழிகள் மோத வழி செய்!
ஒரே ஒரு முறை என் வியர்வை வாசம் முகர்ந்து பார்!
ஒரெ ஒரு முறை என் கரம் பற்றி பார்!
ஒரெ ஒரு முறை என் இதய இயக்கத்திற்கு செவி சாய்த்து பாரடி கண்ணே உனக்கு உன்மை புரியும்...

அவைகளும் உன்னை போலவே பொய்யுரைக்கும் என்று சென்று கொண்டிருக்கிறாயேடி.. நில்! ஒரே ஒரு சொல் கேள்!!!

நான் உன்னை காத‌லிக்கிறேன்...

20071030

Vivekanthar rock


IMG_0575
Originally uploaded by Bala : )

Vivekanthar rock - kanniyakumari

20060917

காதல் காலம்



இன்றும்
உன் இரட்டை விழி என்
நினைவில் இல்லையடி!

உன் இரட்டை ஜடை மட்டுமே
என் நினைவில்!!

ஏனெனில்
நான் உன் விழியோடு
காதல் புரிந்த நாட்களை விட!!!

உன் ஜடையோடு ஜாடை
செய்த நாட்களே அதிகமடி!!!!!

ஒருதலை கதல்

கண்ணிமைக்கும் நேரத்தில் வந்துவிட்டதடி
என்னுள் காதல் !

என் காதலை சொல்லத்தான் காத்திருக்கிறேனடி
உன் பெயர் கூட தெரியாமல்!!!!

நம்பிக்கை

படுத்திக்கையிலும் படித்திருக்கையிலும்
பக்கத்தில் நீ அன்று !

படுத்தாலும் படித்தாலும்
நினைவில் மட்டுமே நீ இன்று!

என் (கவிதை)சிறகுகள் பறப்பதற்கு
வழிகாட்டினாய் நீ அன்று!

என் சிறகுகல் சிதறிகிடக்கின்றன
உன் துணையில்லாமல் இன்று!

என்னை உன்னிலும் உன்னை என்னிலும்
கண்(டார்கள்)டோம் அன்று!

என்னை மட்டுமாவது காண
காத்தூக்கிடக்கிறேன் இன்று!

நம் நினைவுகளும் நிகழ்வுகளும்
ஒன்றுதான் அன்று!

இருப்பினும்!
நீ உயிர் நான் உடல் என்று
பொய் சொல்லவிரும்பவில்லை நான்!
ஏனெனில் இன்று வரை உயிரற்ற உடலோ
உடலற்ற உயிராகவோ நாம் இருந்துக்கொண்டிருக்க
வாய்ப்பே இல்லை! ஆனால் நாம்
உணர்வுகளோடு ஒன்றித்தான் போயிருக்கிறோம்
இது பொய் அல்ல நிஜம்!

மீண்டும் நம் வாழ்வில்
ஒன்றுவோம் என்ற நம்பிக்கையில்
நாட்களை நர்த்திக்கொண்டிருக்கும்

உன் தோழமையோடு உன்

வாய்ச்சொல்



நெருப்பென்றால் வாய்
வெஇந்தாபோகும் என்கிறாயேயம்மா !!

அவள் பொறுக்கி என்றதும்
என் மணம் நொறுங்கிவிட்டதே !!!

தோழி



நான் நேசிக்கும் அவளை
நேசிப்பவர்கள் ஆயிரம் பேர் !

நான் சுவாசிக்கும் அவளை
சுவாசிப்பவர்களும் இலட்சம் பேர் !

நான் பார்க்கும் அவளை
பார்ப்பவர்கள் கோடி பேர் !

என் நினைவிலும்
எனக்காக ஒரு (க)விதை தருவாள்
அவளே என் இ(த)னிமை தமிழ்த்தோழி !

கிறுக்கல்



குழந்தையின் கிறுக்கல்கள் கூட
ஓவியமாகலாம் !

ஒழுங்கற்ற வரிகள் கூட
வரைபடமாகலாம்!

தேவையற்ற வண்ணங்கள் கூட
புது வித மாதிரியாகலாம் !

எறியப்பட்ட பூக்கள் கூட
வரவேற்கும் தோரணையாகலாம் !

வீசப்பட்ட வண்ணப்பொடிகள் கூட
அழகுமிகு கோலங்கலாகலாம் !

அது போலத்தான் என் வரிகளும்
_க____வி____தை___ஆகலாம் !!!!!

சிறை


என்னுடன் வருகையில்
தெரிந்தவர்களுக்கு தெரிந்துவிடுமோ
என்று தன்னை தெரியாமல் திரைக்குள்
சிறைபடுத்திக்கொள்ளும் என்னவளின்
இதயச்சிறையில் நான்!!

20060526

கல்லூரி நாட்கள்


என் வழ்க்கையில் தான் எத்தனை எத்தனை
சுக(ம்)மான சோகங்கள்!

சொல்ல துடிக்கும் மறைந்த மகிழ்வுகள்!

கேட்க கேட்க இனிக்கும் நண்பனின் நக்கல்கள்!

பார்த்து பார்த்து பழகினாலும் புளித்து போகாத புன்னகை முகங்கள்!

திட்டி திட்டி தீர்த்தாலும் தீராத வார்த்தைகள்
தீர்ந்துவிடும் சண்டைககள்!

நீலக் கடல் நிலத்தில் அமிழிந்து போனாலும்
நில்லாதது எங்கள் கேலிகளும் கிண்டல்களும்!

அருகில் அமரும் அவனுக்குத்தான் சோகம்
ஆனால் வருத்தமோ எங்களுக்கு!

சொல்லப்போனால் அது ஒரு அழகிய நிலாக்காலம் தான்!

அன்று அருகில் இருந்தவனை அலட்ச்சியப்படுத்திய நான்
அழுகிறேன் அவனுக்காக இன்று!!!

20060524

மனித மனம்



மனிதன் குரங்கிலிருந்தான் வந்தான்
என்பதற்கு அறிவியல் ஆதாரங்கள் அவசியமில்ளை
ஏனெனில் அவன் மனம் இன்னும் தாவிக்கொண்டுதான் இருக்கிறது...

அன்றும் இன்றும்



படுத்திருக்கையுலும் படித்திருக்கையுலும்
பக்கத்தில் நீ அன்று!

படுத்தாலும் படித்தாலும்
நினைவில் மட்டுமே நீ இன்று!

என் சிறகுகள் சிறகடிப்பதற்கு
வழிகாட்டினாய் அன்று!

என் சிறகுகள் சிறைபடுத்தப்பட்டுல்லன
நீ இல்லாமல் இன்று!

உன்னை என்னிலும் என்னை உன்னிலும்
கண்(டார்கள்)டோம் அன்று!

என்னை மட்டுமாவது காண
காத்துகிடக்கிறேன் இன்று!

நம் நினைவுகளும் நிகழ்வுகளும்
ஒன்று தான் அன்று!

என் நினைவில் நீ உன் நினைவில் நான்
என்று மட்டும் தான் இன்று!

இருப்பினும்!
நீ உயிர் நான் உடல் என்று
பொய் சொல்ல விரும்பவில்லை நான்!
ஏனெனில் உயிரற்ற உடலோ உடலற்ற
உயிராகவோ நாம் வாழ்ந்துகொண்டிறுக்க
வாய்ப்பில்லை! ஆனால்

நம் உணர்வுகளோடு ஒன்றிதான் போயிருந்தோம்
இது பொய் அல்ல நிஜம்!!

மீண்டும் உன் தோள் சாய்வேன் என்ற நம்பிக்கையில் இன்று நான்!

20060516

அவள்

அவள் முகம் என் விழியில்
அவள் இதழ்களின் இசை என் செவிகளில்
அவள் நினைவுகள் என் மனதில்
ஆனால்
அவள் மட்டும் தொைலவில்.

20060331

உன் பெயர்

உன் பெயர்
அகம் ஒன்று நினைத்து புறம் ஒன்று பேச என் உதடுகல் மறுக்கின்றன!!
என் அகத்தினில் அவள் இருப்பதனால் தானோஎன்னையறியாமல் என்னவளின் பெயரையே வாசித்துகொண்டிருக்கின்றதோ!
உன்மை விளங்காமல் உன் நினைவோடு!!!!!!!!!!!!

20060329

என் முதல் கணிணி கவிதை
மன்னிக்கவும் நான் Thamizil தான் எழுத ஆசைபட்டேன்அதனால் தான் ஆங்கிலதில் அச்சிஅடித்துகொண்டிருக்கிறேன்.
எதுஎப்படியாயினும் நன்றிகள் கோடி என் கிறுக்கல்களும் இனிஇங்கே இடம் பெற நல்வழி செய்த நல்லவர்களுக்கு.