Amazon

20100320

காதலில் மட்டும்...

உன் கழுத்துச் சங்கிலியோடு என்னை
கட்டிவைத்து மெ(கொ)ன்றுவிட்டுப்  போகும்
ஒவ்வொரு தருணத்திலும் மெய்மறந்து இரசிக்கின்றேன்
மணற்குவியல்களில் முதல் முறை  தடம் பதித்த‌
குழந்தையைப் போல்!

20100317

என் கிறுக்கிய பக்கங்கள்

உன் இதழ்களின் மௌன‌த்திற்கும், உன் இமைகளின் நடன‌த்திற்கும்
என் விரல்கள் விளக்கமளித்துக் கொண்டே இருக்கிறது
உன் பார்வை படாத என் கிறுக்கிய பக்கங்களில்...

20100315

கல்லூரியின் கடைசி நாள்!

உயிர் பிரியும் தருணத்திலும்
வாழ்த்து பரிமாறல்களோடு
விடை பெற்று கொண்டிருக்கிறேன்
வாழ்க்கையின் யதார்த்தங்களை நோக்கி...

20100309

காணமல் போனவன் பற்றிய அறிவிப்பு...



கடற்கரை மணலுக்குள் கால்கள் புதைய
நட்புபாரட்டும் நட்புகளோடு நடைபயின்ற தருணத்தில்
எதிர்பாரமல் உன் விழி மோதி தொலைந்(த்)த என்னை
கண்டுபிடித்து தருபவளான உனக்கு மட்டும் என் காதலும் பரிசு...

இப்படிக்கு
உனக்குள் தொலைந்(த்)தவன்...

20100216

ஆதலினால்...


உன் ஈரக் கூந்தலில் வாசம் பெற்ற ஓற்றை ரோஜா!
நீ மடிசாயும் தருணங்களில் மட்டும் உலர்ந்து இர(ட்)சிக்கிறது நம் காதலை!!
ஆதலினால் காதல் செய்வோம்!!!

20100202

நட்பு

கைகோர்த்து தோள்சாயும் தருணங்களில்
தொலைந்து போகிறது என் காதலின் வலி(மை)
நட்புக்குள்!

20100128

மரணத்தை நோக்கி !!!

வாழ்க்கை பயணத்தின் முதல் படியில் நின்று என் விருப்பங்களை விதைக்கின்றேன் விருட்சமாக வளர்கிறது என் வெறுமைகள் மட்டுமே!

விளங்கிக்கொள்ளவும் விளக்கிச்சொல்லவும் முடியாமல் அடுத்த படியை நோக்கி தொடர்கிறது
என் பயணம்!!

20090730

பாக்கியசாலி

விலை மதிக்க முடியாத ஒன்றை தினம் தினம் பரிசாக பெரும் பாக்கியசாலி நான்.
உன் இதழ் சிந்தும் புன்னகை.

20090727

காதலில் மட்டும்!

வழிந்துகொண்டிருக்கும் என் உதிரத்தையும்
பொருட்படுத்தாமல் இரசிக்கமுடிகிறது
உன் பதற்றத்தையும், பரபரப்பையும்!!!

--------------------------------------------------

கருமியின் கைக்காசாய் துடித்துக்கொண்டிருக்கிறது
என் இதயம் இருந்த இடத்தில் இருந்துகொண்டே உனக்காக...

----------------------------------------------------

20071117

என் நிணைப்பு

உன்னை
மலர் என்றால் மாலையோடு வாடிவிடுவாய்!

உன்னை
நிலவென்றால் நித்திரையோடு நின்றுவிடுவாய்!

உன்னை
வான்மேக‌மென்றால் காற்றோடு காண‌மல் போய்விடுவாய்!

உன்னை
சிலையென்றால் சீற்றத்தால் சிதைந்துவிடுவாய்!

உன்னை
முத்தென்றால் நீலக்கடலில் மூழ்கிவிடுவாய்!

அத‌னால் தான் உன்னை என் மூச்சாக‌ நினைக்கிறேன்
என் மூச்சுள்ள‌வ‌ரை..

20071031

ஊடல்

காக்கவைத்துவிட்டேன் என்று நான் வரும்வரை காத்திருந்து
வந்தவுடன் வருகிறேன் என்கிறாயேடி... நில்! நில்!

ஒரு நிமிடம் உன் தடங்களை தடை செய்!
ஒரே ஒரு முறை நம் விழிகள் மோத வழி செய்!
ஒரே ஒரு முறை என் வியர்வை வாசம் முகர்ந்து பார்!
ஒரெ ஒரு முறை என் கரம் பற்றி பார்!
ஒரெ ஒரு முறை என் இதய இயக்கத்திற்கு செவி சாய்த்து பாரடி கண்ணே உனக்கு உன்மை புரியும்...

அவைகளும் உன்னை போலவே பொய்யுரைக்கும் என்று சென்று கொண்டிருக்கிறாயேடி.. நில்! ஒரே ஒரு சொல் கேள்!!!

நான் உன்னை காத‌லிக்கிறேன்...

20071030

Vivekanthar rock


IMG_0575
Originally uploaded by Bala : )

Vivekanthar rock - kanniyakumari

20060917

காதல் காலம்



இன்றும்
உன் இரட்டை விழி என்
நினைவில் இல்லையடி!

உன் இரட்டை ஜடை மட்டுமே
என் நினைவில்!!

ஏனெனில்
நான் உன் விழியோடு
காதல் புரிந்த நாட்களை விட!!!

உன் ஜடையோடு ஜாடை
செய்த நாட்களே அதிகமடி!!!!!

ஒருதலை கதல்

கண்ணிமைக்கும் நேரத்தில் வந்துவிட்டதடி
என்னுள் காதல் !

என் காதலை சொல்லத்தான் காத்திருக்கிறேனடி
உன் பெயர் கூட தெரியாமல்!!!!

நம்பிக்கை

படுத்திக்கையிலும் படித்திருக்கையிலும்
பக்கத்தில் நீ அன்று !

படுத்தாலும் படித்தாலும்
நினைவில் மட்டுமே நீ இன்று!

என் (கவிதை)சிறகுகள் பறப்பதற்கு
வழிகாட்டினாய் நீ அன்று!

என் சிறகுகல் சிதறிகிடக்கின்றன
உன் துணையில்லாமல் இன்று!

என்னை உன்னிலும் உன்னை என்னிலும்
கண்(டார்கள்)டோம் அன்று!

என்னை மட்டுமாவது காண
காத்தூக்கிடக்கிறேன் இன்று!

நம் நினைவுகளும் நிகழ்வுகளும்
ஒன்றுதான் அன்று!

இருப்பினும்!
நீ உயிர் நான் உடல் என்று
பொய் சொல்லவிரும்பவில்லை நான்!
ஏனெனில் இன்று வரை உயிரற்ற உடலோ
உடலற்ற உயிராகவோ நாம் இருந்துக்கொண்டிருக்க
வாய்ப்பே இல்லை! ஆனால் நாம்
உணர்வுகளோடு ஒன்றித்தான் போயிருக்கிறோம்
இது பொய் அல்ல நிஜம்!

மீண்டும் நம் வாழ்வில்
ஒன்றுவோம் என்ற நம்பிக்கையில்
நாட்களை நர்த்திக்கொண்டிருக்கும்

உன் தோழமையோடு உன்

வாய்ச்சொல்



நெருப்பென்றால் வாய்
வெஇந்தாபோகும் என்கிறாயேயம்மா !!

அவள் பொறுக்கி என்றதும்
என் மணம் நொறுங்கிவிட்டதே !!!

தோழி



நான் நேசிக்கும் அவளை
நேசிப்பவர்கள் ஆயிரம் பேர் !

நான் சுவாசிக்கும் அவளை
சுவாசிப்பவர்களும் இலட்சம் பேர் !

நான் பார்க்கும் அவளை
பார்ப்பவர்கள் கோடி பேர் !

என் நினைவிலும்
எனக்காக ஒரு (க)விதை தருவாள்
அவளே என் இ(த)னிமை தமிழ்த்தோழி !

கிறுக்கல்



குழந்தையின் கிறுக்கல்கள் கூட
ஓவியமாகலாம் !

ஒழுங்கற்ற வரிகள் கூட
வரைபடமாகலாம்!

தேவையற்ற வண்ணங்கள் கூட
புது வித மாதிரியாகலாம் !

எறியப்பட்ட பூக்கள் கூட
வரவேற்கும் தோரணையாகலாம் !

வீசப்பட்ட வண்ணப்பொடிகள் கூட
அழகுமிகு கோலங்கலாகலாம் !

அது போலத்தான் என் வரிகளும்
_க____வி____தை___ஆகலாம் !!!!!

சிறை


என்னுடன் வருகையில்
தெரிந்தவர்களுக்கு தெரிந்துவிடுமோ
என்று தன்னை தெரியாமல் திரைக்குள்
சிறைபடுத்திக்கொள்ளும் என்னவளின்
இதயச்சிறையில் நான்!!

20060526

கல்லூரி நாட்கள்


என் வழ்க்கையில் தான் எத்தனை எத்தனை
சுக(ம்)மான சோகங்கள்!

சொல்ல துடிக்கும் மறைந்த மகிழ்வுகள்!

கேட்க கேட்க இனிக்கும் நண்பனின் நக்கல்கள்!

பார்த்து பார்த்து பழகினாலும் புளித்து போகாத புன்னகை முகங்கள்!

திட்டி திட்டி தீர்த்தாலும் தீராத வார்த்தைகள்
தீர்ந்துவிடும் சண்டைககள்!

நீலக் கடல் நிலத்தில் அமிழிந்து போனாலும்
நில்லாதது எங்கள் கேலிகளும் கிண்டல்களும்!

அருகில் அமரும் அவனுக்குத்தான் சோகம்
ஆனால் வருத்தமோ எங்களுக்கு!

சொல்லப்போனால் அது ஒரு அழகிய நிலாக்காலம் தான்!

அன்று அருகில் இருந்தவனை அலட்ச்சியப்படுத்திய நான்
அழுகிறேன் அவனுக்காக இன்று!!!